தள்ளாடி தள்ளாடி நடை நடந்து நாங்க சபரிமலை பஜனை பாடல்..
தள்ளாடி தள்ளாடி நடை நடந்து
நாங்க சபரிமலை நோக்கி வந்தோமய்யா
கார்த்திகை நல்ல நாளில் மாலையும் போட்டுகிட்டு
காலையிலும் மாலையிலும் சரணங்கள் சொல்லிகிட்டு
சுவாமியே ஐயப்போ
ஐயப்போ சுவாமியே
சுவாமி சரணம் ஐயப்ப சரணம்
ஐயப்ப சரணம் சுவாமி சரணம்
- சரணங்கள் சொல்லிக்கொண்டு வந்தோமய்யா
இருமுடிய கட்டிக்கிட்டு இன்பமாகப் பாடிக்கிட்டு
ஈசன் மகனே உந்தன் இருப்பிடத்த தேடிக்கிட்டு
பள்ளிகட்டு சபரிமலைக்கு
சபரிமலைக்கு பள்ளிகட்டு
இருமுடிக்கட்டு சபரிமலைக்கு
சபரிமலைக்கு இருமுடிக்கட்டு
- சரணங்கள் சொல்லிக்கொண்டு வந்தோமய்யா
பேட்டைகளும் துள்ளிவிட்டு வேஷங்களும் போட்டுக்கிட்டு
வேடிக்கையாக வந்தோமய்யா
சுவாமி திந்தக்க தோம் தோம் ஐயப்ப திந்தக்க தோம் தோம்
ஐயப்ப திந்தக்க தோம் தோம் சுவாமி திந்தக்க தோம் தோம்
- சரணங்கள் சொல்லிக்கொண்டு வந்தோமய்யா
காணாத காட்சியெல்லாம் கண்ணார கண்டுகிட்டு
காடுமலைகளெல்லாம் கால் நடையா தாண்டிகிட்டு
பம்பயிலே குளித்துவிட்டு பாவமெல்லாம் போக்கிக்கிட்டு
பக்தரெல்லாம் கூடி நின்று
பஜனைகளெல்லாம் பாடிக்கிட்டு
சுவாமியே ஐயப்போ
ஐயப்போ சுவாமியே
- சரணங்கள் சொல்லிக்கொண்டு வந்தோமய்யா
படியேறி போகும்போது பாங்காகக் காயுடைத்து
பலனான உந்தனையே பார்த்துப் பார்த்து சொக்கிக்கிட்டு
நெய்யிலே குளிப்பதையும் நேரிலே பார்த்துவிட்டு
ஐயப்பா சரணம் என்று ஆர்ப்பரித்து பாடிக்கிட்டு
- சரணங்கள் சொல்லிக்கொண்டு வந்தோமய்யா
தள்ளாடி தள்ளாடி நடை நடந்து
நாங்க சபரிமலை நோக்கி வந்தோமய்யா..

Post a comment